இன அழிப்பின் பின்னணியில்
Posted by நிலவன்
Thursday, November 19, 2009 4:18:41 PM
|
Rate this Content
|
5
|
1 Votes
|

"இன அழிப்பின் பின்னணியில்" என்ற தலைப்பில், வெள்ளிக் கிழமை (20/11/2009) பிரித்தானிய நேரம் இரவு பத்து மணிக்கு சூரியோதயம் (http://firstaudio.net/) வானொலியில் கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது.
'புதிய திசைகள்' அமைப்பினர் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளனர்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற ஈழ ஆதரவுப் போராட்டங்களை இன்றுவரை நிகழ்த்திவரும் அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் இந்தியாவிலிருந்து உரையாடலில் கலந்துகொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கே பதிவு செய்து கொள்ளலாம். கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நீங்கள் இவ்விணையத்தில் பதிவு செய்து கொள்ளாமலே பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்.
தமிழில் தட்டச்சு செய்ய: http://www.kuralweb.com/tamil.aspx
பிற்குறிப்பு: கருத்து மற்றும் கேள்விகளை முன்வைத்த அனைவருக்கும் நன்றி.
இந்தக் கலந்துரையாடலின் ஒலிவடிவைக் கீழ்க் காணும் இணைப்பில் கேட்கலாம்.